Wednesday, August 31, 2011




































தடம் மாறிய ரயிலாய்
நீ உதிர்த்து வந்த வாசகங்கள்
என் முன் நீள்கின்றன
இடம் மாறி பூத்த பூவாய்
கசங்கி உதிர்கிறது என் நேசம்

மாற்றத்தின் மகத்துவம் பற்றிய
முதல் சொற்பொழிவை
நீ நிகழ்த்த தொடங்கும் போது
ஏமாற்றத்தின் வலி அதிரும் கானங்களை
என் மனம் மீட்டிக்கொண்டிருக்கிறது


அதிர்ச்சியின் பள்ளத்தாக்கினின்று
நேசத்தின் வேர்களைப் பற்றியபடி
பகடியெனும் முகமூடியணிந்து
மெல்ல எழுகிறேன்

ஆற்றல் குவிந்த வார்த்தைகளை
உன் துணையாய் அனுப்பி வாழ்த்துகிறேன்
போய் வா தேவதையே

எதுவும் யாருக்கும்
எப்போதுமே இருக்க முடியாதுதான்
சொந்தமாய்...

அடுத்தவர் பசுவுக்கேயெனினும்
கொஞ்சம்
கைதூக்கி விடலாம்
புல்கட்டை.



































தடம் மாறிய ரயிலாய்
நீ உதிர்த்து வந்த வாசகங்கள்
என் முன் நீள்கின்றன
இடம் மாறி பூத்த பூவாய்
கசங்கி உதிர்கிறது என் நேசம்

மாற்றத்தின் மகத்துவம் பற்றிய
முதல் சொற்பொழிவை
நீ நிகழ்த்த தொடங்கும் போது
ஏமாற்றத்தின் வலி அதிரும் கானங்களை
என் மனம் மீட்டிக்கொண்டிருக்கிறது


அதிர்ச்சியின் பள்ளத்தாக்கினின்று
நேசத்தின் வேர்களைப் பற்றியபடி
பகடியெனும் முகமூடியணிந்து
மெல்ல எழுகிறேன்

ஆற்றல் குவிந்த வார்த்தைகளை
உன் துணையாய் அனுப்பி வாழ்த்துகிறேன்
போய் வா தேவதையே

எதுவும் யாருக்கும்
எப்போதுமே இருக்க முடியாதுதான்
சொந்தமாய்...

அடுத்தவர் பசுவுக்கேயெனினும்
கொஞ்சம்
கைதூக்கி விடலாம்
புல்கட்டை.

No comments:

Post a Comment