சிறு வயதில் ஆலங்கட்டிகளை
சேகரித்த பாட்டில்
இன்று எந்த பரண் மேலோ
மருந்துக்கு உதவுமென்று
யாரோ சொல்ல
நனைந்தபடி சேகரித்தோம்
நோய்பிடித்துக்கொண்டது
நமக்கு
கரைந்துவரும் கட்டிகளை
என் கன்னத்தில் அழுத்தி விளையாடுவாய்
வெதுவெதுப்பூட்டும் உன் ஸ்பரிசம்
சருமத்தில் வலை பின்னும்
ஏனோ இப்போது எந்த மழையும்
அழைத்து வருவதில்லை
ஆலங்கட்டிகளை
தனியாகவே விழுகின்றன
துளிகள் ஒவ்வொன்றும்
விழும் இந்த மழைத்துளிகளை
வெறித்தபடி நிற்கிறேன்
தனியாக.
No comments:
Post a Comment