சிள்வண்டுகளின் ரீங்கரிப்புடன்
நாணல் செடிகள் அசைய
தென்பெண்ணையின்
குளிர்ந்த மணலில் படுத்தபடி
நான் கேட்பேன்
கிளிஞ்சல்களின் பாடலை
நான் படிப்பேன்
நட்சத்திரங்களின் கவிதையை
நான் வரைவேன்
நதியலைகளின் மௌனத்தை
இரவுகளின் ரம்மியத்தில்
மணல் வாருவோர் இரைச்சல்கள்
நிறையத்தொடங்கியபின்
காணாமல் போயின
நட்சத்திரங்களின் கவிதையும்
நதியலைகளின் மௌனமும்
குவிக்கபடும் மணற்திட்டுக்கள்
ஒவ்வொன்றின் உள்ளிருந்தும்
காகத்தின் ஒப்பாரியென
கேட்டபடியிருக்கின்றன
கிளிஞ்சல்களின் பாடல் மட்டும்.
No comments:
Post a Comment