அற்புதமான தருணங்களின்
வெம்மையில்
வார்த்தைகள் மறுக்கின்றன முளைக்க.
உடைகழற்றியெறிந்து
நெருங்கி வா இன்னும்
பெளர்ணமிக்கும் வெட்கம்
தேய்பிறையாகட்டும்
நீந்தி நீந்தி முழுகும்
பயங்களை
சாம்பலும் மிஞ்சாமல் கொளுத்து
எதற்கும் இருக்கிறேன்
நானென்கிற ஆறுதல்
நிரம்பட்டும் தற்காலிகமாக
திரைகிழித்து சற்றே
உன் அசல்முகம் காட்டு
பளிங்கின் சலனமற்ற பரப்பில்
மிதக்கட்டும் நம் சுயம் மட்டும்.
No comments:
Post a Comment