என்னை
உனக்கு மட்டுமல்ல
எனக்கும் தான்
பிடிக்கவில்லை
மல்லிகையின்
மலர்ச்சி கண்டு
மகிழ்ந்து முடிக்கும் முன்பே
உதிரத்தொடங்கி விட்டேன்
செவிப்பசியோடு அலைந்தேன்
கேட்டன
ஓலங்கள் மட்டும்
கல்லும் நாயும்
காணக்கிடைக்கிறது
காணாமல் போனது
கைகள்
தேடுவது
புத்தகத்திற்கான
பணத்தை மட்டுமல்ல
வாங்க தகுந்த புத்தகத்தையும்
நாளை அழியும்
வெறும் தசை இதுவென்ற ஞானம் உதித்தது
துகிலுரிந்தப் பிறகு
கனியும் வரை
காத்திருந்தேன்
பறித்துவிட்டார்கள் யாரோ
அமைதி தேடி அலைந்தேன்
கிடைக்கவேயில்லை
மயானத்தைத் தவிர.
No comments:
Post a Comment