வெட்கத்தின் குவிமுனை
உழுது உழுது
கிளரும் உனது வாசம்
ஒரு நீண்ட வாசகத்தின்
முதற் சொல்லில் நாம்
ஒவ்வொரு சொல்லுக்கிடையேயும்
புற்றுகள்
வழக்கம் போலவே
குடையின்றி வா
நமக்கான காத்திருப்பில்
அந்த மரத்தடிகள்
நழுவிய சேலையை
மீண்டும் திருப்பாதே
அதன் பணிக்கு
மழைச்சிரிப்பைக் காட்டிலும்
அது முக்கியமில்லை
என் கண்களுக்கு
இதுவே ஈடன் தோட்டம்
செவி நிறையும்
சர்ப்ப உபதேசம்
சாபம் வாங்கலாம் நாம்.
No comments:
Post a Comment