Thursday, August 18, 2011

இளநீர்














 தாகம் தணிக்கும்
இளநீர் விற்பவன்
வெயிலோடு 


நகரவாசிகளுக்கு
பிடித்துபோனதாம் இளநீரை
பிடிக்காமல் போனது வாழ்க்கை
இளநீர் விற்பவனுக்கு


கள்ளும் கூட இளநீர்தானென்ற
நண்பனோடு சேர்ந்து
தள்ளாடியக் கணங்களும்
வீட்டில்
அல்லாடியக் கணங்களும்


முப்பொழுதும்
இளநீர் குடித்தக் காலத்தை
வெட்டிவிட்டன குலைப்பூச்சிகள்


பட்டுப் போனது மரம்
படாமல் போனது
கட்டிய மருந்து


அடிமரத்தில் முதுகு சாய்த்து
நான் கவிதை சொல்வேன்
அவைகள்
கேட்டுக்கொண்டிருக்கும்


பட்டுவிட்ட அவைகளும்
பட்டுக்கொண்டிருக்கும் நானுமாக
இன்றைக்கும் எங்கள் இருப்பு


ரசாயனத்தின் திராவக நெடியில்
கவிதைகள்தாம் போயின
கரைந்து. 


















 தாகம் தணிக்கும்
இளநீர் விற்பவன்
வெயிலோடு 


நகரவாசிகளுக்கு
பிடித்துபோனதாம் இளநீரை
பிடிக்காமல் போனது வாழ்க்கை
இளநீர் விற்பவனுக்கு


கள்ளும் கூட இளநீர்தானென்ற
நண்பனோடு சேர்ந்து
தள்ளாடியக் கணங்களும்
வீட்டில்
அல்லாடியக் கணங்களும்


முப்பொழுதும்
இளநீர் குடித்தக் காலத்தை
வெட்டிவிட்டன குலைப்பூச்சிகள்


பட்டுப் போனது மரம்
படாமல் போனது
கட்டிய மருந்து


அடிமரத்தில் முதுகு சாய்த்து
நான் கவிதை சொல்வேன்
அவைகள்
கேட்டுக்கொண்டிருக்கும்


பட்டுவிட்ட அவைகளும்
பட்டுக்கொண்டிருக்கும் நானுமாக
இன்றைக்கும் எங்கள் இருப்பு


ரசாயனத்தின் திராவக நெடியில்
கவிதைகள்தாம் போயின
கரைந்து. 





No comments:

Post a Comment