தாகம் தணிக்கும்
இளநீர் விற்பவன்
வெயிலோடு
நகரவாசிகளுக்கு
பிடித்துபோனதாம் இளநீரை
பிடிக்காமல் போனது வாழ்க்கை
இளநீர் விற்பவனுக்கு
கள்ளும் கூட இளநீர்தானென்ற
நண்பனோடு சேர்ந்து
தள்ளாடியக் கணங்களும்
வீட்டில்
அல்லாடியக் கணங்களும்
முப்பொழுதும்
இளநீர் குடித்தக் காலத்தை
வெட்டிவிட்டன குலைப்பூச்சிகள்
பட்டுப் போனது மரம்
படாமல் போனது
கட்டிய மருந்து
அடிமரத்தில் முதுகு சாய்த்து
நான் கவிதை சொல்வேன்
அவைகள்
கேட்டுக்கொண்டிருக்கும்
பட்டுவிட்ட அவைகளும்
பட்டுக்கொண்டிருக்கும் நானுமாக
இன்றைக்கும் எங்கள் இருப்பு
ரசாயனத்தின் திராவக நெடியில்
கவிதைகள்தாம் போயின
கரைந்து.
No comments:
Post a Comment