பேச்சை விடவும்
பொருள் பொதிந்த
நிமிஷங்களை
சுமந்துக் கொண்டிருக்கிறது
நம் மௌனம்
பரவி மடங்கி
சுருங்கி விரிந்து
தவிக்கும் உன் பாத விரல்களுக்குத்தான்
ஊற்றிக்கொடுக்கிறேன்
என் பார்வைகளை
தாவணி முனை சுருட்டும்
உன் பாவனையில்தான்
புதைந்துக்கிடக்கிறது
எனக்கான எல்லாம்
காற்று மோதலில்
மிதக்கும் பஞ்சென
மனவெளியில்
வெடித்து சிதறுகின்றன
உளறல்கள்
முழுகத் தொடங்கும் முன்பாக
தக்கை தேடும் கடைசி முயற்சியும்
தோற்றுப் போகிறது
உன்முன்.
No comments:
Post a Comment