Saturday, August 27, 2011














நாட்களின் யாத்திரையில்
கொஞ்ச கொஞ்சமாய் இழந்து வருகிறோம்


பூக்களின் புன்னகையாகவும்
புயலின் உக்கிரமாகவும்
புரியவியலா ஒரு கவிதையென நீ


நிழலில் ஒதுங்கியே
பழக்கப்பட்டுப் போனதால்
உஷ்ணத்தை உணர தயக்கமா
இல்லாவிடில்
நிழல் நுகர்வு மயக்கமா


ஒவ்வொரு துளியையும்
பருகத்துடிக்கும் நாம்
இதழின் விலாசம் இன்னும் அறியாதவராய்...


ஒளிக்கீற்று உட்புகமுடியா ஊடகத்தை
சிருஷ்டித்துக் கொண்ட
நாமே நமக்கு பகையாய்...


எதையுமே சரியாய் இசைக்காவிடினும்
கையில் வீணையோடும்
மனதில் ஆர்வத்தோடும்


யாதார்த்த வெம்மை சுட்டு பொசுக்கையிலும்
இன்னும் விடைபெறா
கனவுச் சிறகுகள்
சிலிர்ப்பூட்டும் வருடலாய்...


துண்டு துண்டாய் சிதறினும்
எஞ்சிய ரசப் படிவத்தில்
அலை அலையாய் மின்னும்  ரூபங்கள்
நீயாகவும்...
நானாகவும்...















நாட்களின் யாத்திரையில்
கொஞ்ச கொஞ்சமாய் இழந்து வருகிறோம்


பூக்களின் புன்னகையாகவும்
புயலின் உக்கிரமாகவும்
புரியவியலா ஒரு கவிதையென நீ


நிழலில் ஒதுங்கியே
பழக்கப்பட்டுப் போனதால்
உஷ்ணத்தை உணர தயக்கமா
இல்லாவிடில்
நிழல் நுகர்வு மயக்கமா


ஒவ்வொரு துளியையும்
பருகத்துடிக்கும் நாம்
இதழின் விலாசம் இன்னும் அறியாதவராய்...


ஒளிக்கீற்று உட்புகமுடியா ஊடகத்தை
சிருஷ்டித்துக் கொண்ட
நாமே நமக்கு பகையாய்...


எதையுமே சரியாய் இசைக்காவிடினும்
கையில் வீணையோடும்
மனதில் ஆர்வத்தோடும்


யாதார்த்த வெம்மை சுட்டு பொசுக்கையிலும்
இன்னும் விடைபெறா
கனவுச் சிறகுகள்
சிலிர்ப்பூட்டும் வருடலாய்...


துண்டு துண்டாய் சிதறினும்
எஞ்சிய ரசப் படிவத்தில்
அலை அலையாய் மின்னும்  ரூபங்கள்
நீயாகவும்...
நானாகவும்...


No comments:

Post a Comment