Monday, August 22, 2011

உன் ஸ்நேகம் வேண்டி
































அலையடித்தது
கால் நனைக்க வந்து
மூழ்கிப் போய் விட்டேன்

எல்லா காணிக்கைகளையும்
முன்வைத்தேன்
தந்தாய் மௌனத்தை

இன்னமும் என் செவிகளில்
உன் ரீங்காரம் மட்டுமே

கோபுரம் சரிந்து விட்டதால்
தரையில் அநாதையாய்
கலசம்
இடிபாடிகளில் சிக்கிக்கொண்டும்
நீள்கிறதென் கைகள்
உன் ஸ்நேகம் வேண்டி

காற்றுவயலில்
நடவு நடத்திய
உன் கொலுசின் பரல்கள்
எந்தச் சபையில்
சிதறிவிட்டன

பாயிரத்தோடு
நின்றுவிட்டதே
நம் காவியம்
பல்லவியோடு
முடிந்துவிட்டதாய் 
நம் பாடல்.































அலையடித்தது
கால் நனைக்க வந்து
மூழ்கிப் போய் விட்டேன்

எல்லா காணிக்கைகளையும்
முன்வைத்தேன்
தந்தாய் மௌனத்தை

இன்னமும் என் செவிகளில்
உன் ரீங்காரம் மட்டுமே

கோபுரம் சரிந்து விட்டதால்
தரையில் அநாதையாய்
கலசம்
இடிபாடிகளில் சிக்கிக்கொண்டும்
நீள்கிறதென் கைகள்
உன் ஸ்நேகம் வேண்டி

காற்றுவயலில்
நடவு நடத்திய
உன் கொலுசின் பரல்கள்
எந்தச் சபையில்
சிதறிவிட்டன

பாயிரத்தோடு
நின்றுவிட்டதே
நம் காவியம்
பல்லவியோடு
முடிந்துவிட்டதாய் 
நம் பாடல்.

No comments:

Post a Comment