அலையடித்தது
கால் நனைக்க வந்து
மூழ்கிப் போய் விட்டேன்
எல்லா காணிக்கைகளையும்
முன்வைத்தேன்
தந்தாய் மௌனத்தை
இன்னமும் என் செவிகளில்
உன் ரீங்காரம் மட்டுமே
கோபுரம் சரிந்து விட்டதால்
தரையில் அநாதையாய்
கலசம்
இடிபாடிகளில் சிக்கிக்கொண்டும்
நீள்கிறதென் கைகள்
உன் ஸ்நேகம் வேண்டி
காற்றுவயலில்
நடவு நடத்திய
உன் கொலுசின் பரல்கள்
எந்தச் சபையில்
சிதறிவிட்டன
பாயிரத்தோடு
நின்றுவிட்டதே
நம் காவியம்
பல்லவியோடு
முடிந்துவிட்டதாய்
நம் பாடல்.
No comments:
Post a Comment