Thursday, August 18, 2011

ஒற்றை மரம்




மீண்டும் மீண்டும்
சலிப்புமிழும் தினங்களே நடையுறுகின்றன

கணங்கள் ஒவ்வொன்றும்
மாற்றமுடையதெனும் குரல்
கைகொடுப்பதேயில்லை அநேகப் பொழுதுகளின் வீழ்ச்சிகளில்.

நிழுலும் இழந்த பொழுதுகளின் வலி பொறாமல்
 கதறிக்கிளம்பும் அழுகையின் அதிர்வுகள்
வாயு வெளிதனில் ரீங்கரித்தபடியே இருக்கின்றன...

தலையிழந்த முண்டமேனும்
ரூபமற்ற ஆவியெதுவும்
 உயிருறிஞ்சும் யட்சிணியேதும்
முட்கள் மண்டிய பெண்மடியாவது
கிடைக்ககூடுமா துணையென.



மீண்டும் மீண்டும்
சலிப்புமிழும் தினங்களே நடையுறுகின்றன

கணங்கள் ஒவ்வொன்றும்
மாற்றமுடையதெனும் குரல்
கைகொடுப்பதேயில்லை அநேகப் பொழுதுகளின் வீழ்ச்சிகளில்.

நிழுலும் இழந்த பொழுதுகளின் வலி பொறாமல்
 கதறிக்கிளம்பும் அழுகையின் அதிர்வுகள்
வாயு வெளிதனில் ரீங்கரித்தபடியே இருக்கின்றன...

தலையிழந்த முண்டமேனும்
ரூபமற்ற ஆவியெதுவும்
 உயிருறிஞ்சும் யட்சிணியேதும்
முட்கள் மண்டிய பெண்மடியாவது
கிடைக்ககூடுமா துணையென.

No comments:

Post a Comment