மீண்டும் மீண்டும்
சலிப்புமிழும் தினங்களே நடையுறுகின்றன
கணங்கள் ஒவ்வொன்றும்
மாற்றமுடையதெனும் குரல்
கைகொடுப்பதேயில்லை அநேகப் பொழுதுகளின் வீழ்ச்சிகளில்.
நிழுலும் இழந்த பொழுதுகளின் வலி பொறாமல்
கதறிக்கிளம்பும் அழுகையின் அதிர்வுகள்
வாயு வெளிதனில் ரீங்கரித்தபடியே இருக்கின்றன...
தலையிழந்த முண்டமேனும்
ரூபமற்ற ஆவியெதுவும்
உயிருறிஞ்சும் யட்சிணியேதும்
முட்கள் மண்டிய பெண்மடியாவது
கிடைக்ககூடுமா துணையென.
No comments:
Post a Comment