தோட்டங்களை சிதிலபடுத்திவிட்டு
ஒரு பூவுக்கான யாசகம்
விளைகிறது உன் வார்த்தைகளில்
லாவகம் படர்ந்த
உன் பாதையில்
திசை தேட முடியவில்லை
என்னால்
பூட்டிய அறையெனத் தெரிந்தும்
விழுகின்றன
என் விண்ணப்பங்கள்
அஸ்தமனம் அழகென்று
அந்தியை காட்டிய உனக்கு
உதயத்தை காட்டவே
இரவில் நிற்கிறேன் நான்
No comments:
Post a Comment