நிழல் போர்த்திய உருவமென
எப்போதேனும்
வந்து போகும் ஒரு கனவாய் நீ.
சிறகடிப்புகள் யாவும்
நின்று போயின
எப்போதேனும்
கேட்கக் கூடும் அதன் தேய்வுறும் ஒலி மட்டும்.
கடிகாரம்தான்
எப்படி அறியும்
காத்திருத்தலை
ஒரே பக்கத்தோடு
முடிந்து விடுவதில்லைதான்
எந்த புத்தகமும்.
No comments:
Post a Comment