மறு உயிர்ப்பில்
எனக்கு விருப்பமில்லை
சருகுகள் தங்கிவிட்டன
உதிர்ந்தவை யாவும்
மலர்கள்
ஏக்கத்தால் நிரப்பட்டு
இழப்புகளால் குதறப்படுகையில்
எழும்பின பிரமிடுகள்
என்மீது
மிஞ்சியிருப்பவை
சுவாலை புசித்த
சாம்பல் நாட்கள்
ஒரு நாளின்
சுவாசக் காற்றில்
அதுவும் சிதறக்கூடும்.
No comments:
Post a Comment