மாம்ஸத்தின் ருசியை
மனிதர்களுக்கு உணர்த்திய தீ
இன்றும் எரிக்கிறது
பிராணிகளை
கூடவே பெண்களையும்
அதை புசிப்பது பாவமென்ற
வள்ளலாரையும்
ருசித்து விட்டது காலமண்
சதைமென்று ருசித்தல்
சரியாவென கேட்டுக்கொண்டிருக்கையில்
நிகழ்ந்த உன் மௌனம்
மென்றுக்கொண்டிருந்தது
என் வார்த்தைகளை
சைவமென்றும் அசைவமென்றும்
பிரிந்தன ஜாதிகள்
இன்று
எல்லா ஜாதிகளும்
பிரிக்கின்றன
சிக்கன் பொட்டலத்தை.
No comments:
Post a Comment