கடன் வாங்கினால்தான்
கழிக்க முடிகிறதாம்
காலத்தை
கடன் வாங்குவது தவறெனில்
முதல் குற்றம்
கணக்கு வாத்தியாருடையதே
சுயத்தில் நின்று
நொடிதோறும் அவதியுறும்
நட்சத்திரம் பார்க்கிலும்
கடன் வாங்கி
அலங்கரித்துக் கொள்ளும்
நிலவே பேசப்படுகிறது
ஆயின்
நட்சத்திரத்திற்கென
என்றுமில்லை
அமாவாசை.
No comments:
Post a Comment