Friday, August 19, 2011

கடன்






















கடன் வாங்கினால்தான்
கழிக்க முடிகிறதாம்
காலத்தை

கடன் வாங்குவது தவறெனில்
முதல் குற்றம்
கணக்கு வாத்தியாருடையதே

சுயத்தில் நின்று
நொடிதோறும் அவதியுறும்
நட்சத்திரம் பார்க்கிலும்

கடன் வாங்கி
அலங்கரித்துக் கொள்ளும்
நிலவே பேசப்படுகிறது

ஆயின்
நட்சத்திரத்திற்கென
என்றுமில்லை
அமாவாசை.





















கடன் வாங்கினால்தான்
கழிக்க முடிகிறதாம்
காலத்தை

கடன் வாங்குவது தவறெனில்
முதல் குற்றம்
கணக்கு வாத்தியாருடையதே

சுயத்தில் நின்று
நொடிதோறும் அவதியுறும்
நட்சத்திரம் பார்க்கிலும்

கடன் வாங்கி
அலங்கரித்துக் கொள்ளும்
நிலவே பேசப்படுகிறது

ஆயின்
நட்சத்திரத்திற்கென
என்றுமில்லை
அமாவாசை.

No comments:

Post a Comment