Friday, August 19, 2011






















சில்லிடும் காற்றின் ஊடுருவல்
குடிசை வெளியெங்கும்


நம் அழுகையின் வலி சுமந்து
நீள்கிறது
இந்த இரவு
தயவு செய்து நீ அழாதே
என் கருப்பை
உதிர்க்கத்தவறிய குருதியில்
உதித்து வந்த மகளே அழாதே


மார்பை கவ்வியிருக்கும்
பிஞ்சு உதடுகள்
அப்படியே இருக்கட்டும்
உறிஞ்சுதலின்
எல்லா வாசல்களும் திறக்கபடட்டும்


மகளே
விதியின் கூர்முனைகள்
நெருங்குகின்றன கழுத்தை
நாளை உன் சூரியன்
உதிக்கப்போவதில்லை


நம் சிறு நேர சந்திப்பின்
நிரந்திர அடையாளமென
ஒரு சன்ன புன்னகை கொண்டு
விடைகொடுக்க முயற்சி செய்
என் செல்ல மகளே
மறு ஜென்மத்திலேனும்
மாறியிருக்கட்டும்
விதியோ
அல்லதுன் குறியோ.





















சில்லிடும் காற்றின் ஊடுருவல்
குடிசை வெளியெங்கும்


நம் அழுகையின் வலி சுமந்து
நீள்கிறது
இந்த இரவு
தயவு செய்து நீ அழாதே
என் கருப்பை
உதிர்க்கத்தவறிய குருதியில்
உதித்து வந்த மகளே அழாதே


மார்பை கவ்வியிருக்கும்
பிஞ்சு உதடுகள்
அப்படியே இருக்கட்டும்
உறிஞ்சுதலின்
எல்லா வாசல்களும் திறக்கபடட்டும்


மகளே
விதியின் கூர்முனைகள்
நெருங்குகின்றன கழுத்தை
நாளை உன் சூரியன்
உதிக்கப்போவதில்லை


நம் சிறு நேர சந்திப்பின்
நிரந்திர அடையாளமென
ஒரு சன்ன புன்னகை கொண்டு
விடைகொடுக்க முயற்சி செய்
என் செல்ல மகளே
மறு ஜென்மத்திலேனும்
மாறியிருக்கட்டும்
விதியோ
அல்லதுன் குறியோ.

No comments:

Post a Comment