Thursday, August 18, 2011

மழைக்குப் பிறகான மணம்.






























நான் நின்றுக்கொண்டிருக்கிறேன்
எனும் உறுத்தலோடு
நீ அமர்ந்திருக்கிறாய்...   


வாய்ப்பானதொரு சந்தர்ப்பத்தில்
மடிந்திருக்கும் உன் கால்கள்
நேர்பெற்றுவிடக் கூடும்


தயக்கத்துடனான உன் அமர்வில் தென்படும்
தவிப்பின் சலனங்கள்
சுவாரஸியமானவை


இயல்பின்மையில் துளிர்க்கும்
வார்த்தைகளிலும் சேர்ந்திருக்கிறது
இயல்பான மென்மையும் 
அதனியல்பான வசீகரமும்


ஜன்னலுக்கப்பால் கடந்துச் செல்லும்
பெயரறியா பறவையொன்றை
ரஸிப்பதான பாவனையில் நீ எழுந்து நிற்கையில்
பால் தீர்த்த கைக்குழந்தைக்காரி உணரும்
மழைக்குப் பிறகான மணம்.





























நான் நின்றுக்கொண்டிருக்கிறேன்
எனும் உறுத்தலோடு
நீ அமர்ந்திருக்கிறாய்...   


வாய்ப்பானதொரு சந்தர்ப்பத்தில்
மடிந்திருக்கும் உன் கால்கள்
நேர்பெற்றுவிடக் கூடும்


தயக்கத்துடனான உன் அமர்வில் தென்படும்
தவிப்பின் சலனங்கள்
சுவாரஸியமானவை


இயல்பின்மையில் துளிர்க்கும்
வார்த்தைகளிலும் சேர்ந்திருக்கிறது
இயல்பான மென்மையும் 
அதனியல்பான வசீகரமும்


ஜன்னலுக்கப்பால் கடந்துச் செல்லும்
பெயரறியா பறவையொன்றை
ரஸிப்பதான பாவனையில் நீ எழுந்து நிற்கையில்
பால் தீர்த்த கைக்குழந்தைக்காரி உணரும்
மழைக்குப் பிறகான மணம்.

No comments:

Post a Comment